தனிப்பட்ட தகராறு காரணமாக தந்தையை கொன்ற மகன்

தனிப்பட்ட தகராறு காரணமாக தந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மகன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் மினுவாங்கொட – வேகோவ்வ பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகராறே இக் கொலைக்கு காரணம் என பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவத்தில் 82 வயதான தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.